கோவை,மே.10: ஊழல் முறைகேடு, நிர்வாக சீர்கேடு ஆகியவற்றில் சிக்கிதவிக்கும் தொலைத்தொடர்பு கூட்டுறவு சங்கத்தின் நடவடிக்கைகளை கண்டித்து நேற்று சங்க அலுவலகத்தை பி.எஸ்.என்.எல் ஊழியர்கள் முற்றுகையிட்டு தர்ணாவில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. மாதம் தவறாமல் ஊழியர்களிடையே சேமிப்பு என்ற பெயரில் பணத்தை பிடிக்கும் கூட்டுறவு சங்கம் அவசரதேவைக்குகூட கடன் வழங்காமல் கூட்டுறவு சங்கத்தையே சீர்குலைப்பதாக தொடர்ந்து பி.எஸ்.என்.எல் ஊழியர்கள் குற்றம்சாட்டி வந்தனர். இந்த நிலையில், கடந்த 6 மாதங்களாக அவசர தேவைக்கு கூட கடன் வழங்காமல் இழுத்தடித்து ஊழல் முறைகேட்டில் ஈடுபடுவதாக கூறி கோவை ரயில்நிலையம் எதிரே உள்ள தொலைத்தொடர்புத்துறை பணியாளர்கள் கூட்டுறவு சங்கத்தை பி.எஸ்.என்.எல் ஊழியர் சங்கத்தினர் நேற்று முற்றுகையிட்டு தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.