ராஜபாளையம், மே 10: தேவதானம் நச்சாடை தவிர்த்தருளிய சுவாமி திருக்கோவில் வைகாசி விசாக பெருந்திருவிழா கொடியேற்றத்துடன் துவங்கியது. ராஜபாளையம் அருகே தேவதானத்தில் பாண்டி நாட்டு பஞ்சபூத ஸ்தலங்களில் ஒன்றான ஆகாய ஸ்தலமாக விளங்கும் தவம் பெற்ற நாயகி உடனுறை நச்சாடை தவிர்த்தருளிய சுவாமி திருக்கோயிலில் வைகாசி விசாகத் திருவிழா கொடியேற்றத்துடன் துவங்கியது. செயல் அலுவலர் மகேந்திரன், கோயில் அறங்காவலர் சாந்தகுமாரி நாச்சியார் ஆகியோர் முன்னிலையில் கொடி மரத்திற்கு மேள, தாளங்கள் முழங்க பால், தயிர், மஞ்சள், இளநீர், சந்தனம் உள்ளிட்ட பல்வேறு பொருட்களால் அபிேஷகம் செய்யப்பட்டு தீபாராதனை நடந்தது.