சங்கரன்கோவிலில் விசைத்தறி நெசவாளர்களுக்கான குரூப் இன்சூரன்ஸ் பதிவு முகாம்

சங்கரன்கோவில், மே 10: சங்கரன்கோவிலில் விசைத்தறி நெசவாளர்களுக்கான ஜிஐஎஸ்  குரூப் இன்சூரன்ஸ் பதிவு முகாம், இன்று தொடங்கி 3 நாட்கள் நடக்கிறது. இதுகுறித்து மாஸ்டர்வீவர்ஸ் அசோசியேசன் நிர்வாகி சுப்பிரமணியன் கூறியதாவது: ராஜபாளையம் சிட்ரா விசைத்தறி பணி மையத்துடன் இணைந்து பதிவு செய்த குரூப் இன்சூரன்ஸ் திட்டம், வருகிற ஜூன் மாதத்துடன் முடிவடைகிறது. இனி ஒவ்வொரு ஆண்டும் மே மாதம் மட்டுமே ஜிஐஎஸ் குரூப் இன்சூரன்ஸ் திட்டத்தில் பதிவு செய்யவோ அல்லது புதுப்பிக்கவோ முடியும்.

எனவே இந்த ஆண்டிற்கான பதிவு செய்தல் முகாம் சங்க கட்டிடத்தில் இன்று தொடங்கி 3 நாட்கள்,  காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெறுகிறது. எனவே முகாமில் கலந்து கொள்ள வரும் விசைத்தறி  நெசவாளர்கள் பாஸ்போர்ட் போட்டோ 4, ஆதார்அட்டை நகல் 1, நியமனதாரர்  ஆதார் நகல் 1, பாங்க் பாஸ்புக் நகல் 1, செல்போன் எண், மற்றும்  இன்சூரன்ஸ் கட்டணம் ரூ.80 ஆகியவற்றுடன் வர வேண்டும். இவ்வாறு கூறினார்.

Related Stories: