சங்கரன்கோவில், மே 10: சங்கரன்கோவிலில் விசைத்தறி நெசவாளர்களுக்கான ஜிஐஎஸ் குரூப் இன்சூரன்ஸ் பதிவு முகாம், இன்று தொடங்கி 3 நாட்கள் நடக்கிறது. இதுகுறித்து மாஸ்டர்வீவர்ஸ் அசோசியேசன் நிர்வாகி சுப்பிரமணியன் கூறியதாவது: ராஜபாளையம் சிட்ரா விசைத்தறி பணி மையத்துடன் இணைந்து பதிவு செய்த குரூப் இன்சூரன்ஸ் திட்டம், வருகிற ஜூன் மாதத்துடன் முடிவடைகிறது. இனி ஒவ்வொரு ஆண்டும் மே மாதம் மட்டுமே ஜிஐஎஸ் குரூப் இன்சூரன்ஸ் திட்டத்தில் பதிவு செய்யவோ அல்லது புதுப்பிக்கவோ முடியும்.