தென்காசி, மே 10: தென்காசி வீரமாமுனிவர் ஆர்.சி.மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் மருதுபாண்டியன் பணி நிறைவு பெற்றதையடுத்து பிரிவுபசார விழா நடந்தது. விழாவிற்கு புனிதமிக்கேல் அதிதூதர் ஆலய வட்டார அதிபரும், பள்ளியின் தாளாளருமான சகாயசின்னப்பன் தலைமை வகித்தார். உதவி தலைமை ஆசிரியை மேரிகாஞ்சனா வரவேற்றார். பாளை ஆர்.சி.பள்ளிகளின் கண்காணிப்பாளர் வியாகப்பராஜ், மருதுபுரம்புதூர் விஜயன், மாவட்ட கல்வி அலுவலர் (பொறுப்பு) சீனிவாசன், ஓய்வுபெற்ற முதன்மை கல்வி அலுவலர் ஜெயங்கண்ணு, சகோதரர் பாலசுப்பிரமணியன், புனிதமிக்கேல் அதிதூதர் ஆலய உதவி பங்குத்தந்தை சுதன், சகாயதாஸ் ஆகியோர் வாழ்த்தி பேசினர்.