உலக செஞ்சிலுவை தின விழா

கெங்கவல்லி, மே 9:  கெங்கவல்லி அருகே கடம்பூர் அரசுப்பள்ளியில் உலக செஞ்சிலுவை தினவிழா கொண்டாடப்பட்டது. நிகழ்ச்சிக்கு, கல்வி மேலாண்மை குழு தலைவர் மீனாம்பிகா தலைமை வகித்தார். கடம்பூர் அரசுப்பள்ளி தலைமையாசிரியர் செல்வம் கலந்து கொண்டார். நிகழ்ச்சியில், செஞ்சிலுவைச் சங்கத்தை உருவாக்கிய ஜான் ஹென்றி டியூனண்ட் பிறந்த தினத்தை போற்றும் வகையில் ஆண்டுதோறும், உலக செஞ்சிலுவை தினம் கொண்டாடப்படுகிறது. போரில், காயமடைந்த வீரர்களுக்கு பாரபட்சமின்றி உதவ சர்வதேச அளவில் ஒரு அமைப்பு உருவாக்கி, 1864ல் செஞ்சிலுவைச் சங்கம் உருவாக்கப்பட்டது குறித்து மாணவர்களுக்கு தெரிவிக்கப்பட்டது. கங்காதேவி நன்றி கூறினார்.

Related Stories: