சீர்காழி அருகே ஊர் காவல்படை தலைமை கமாண்டர் வீட்டில் 16 பவுன் திருட்டு

சீர்காழி, மே 9: சீர்காழி அருகே ஊர்காவல் படை தலைமை கமாண்டர் வீட்டில் 16 பவுன் நகையை மர்ம நபர்கள் திருடிச் சென்றனர். சீர்காழி அருகே கதிராமங்கலம் மெயின்ரோட்டில் வசிக்கும் கண்ணையன் மகன் மணிமாறன் (47). இவர் ஊர்க்காவல் படை தலைமை கமாண்டராக பணிபுரிந்து வருகிறார். இந்நிலையில் கடந்த 6ம் தேதி காலை மணிமாறன் தனது குடும்பத்துடன் காரில் திருச்செந்தூர் கோயிலுக்கு சென்று விட்டார். மணிமாறன் மாமனார் சின்னப்பிள்ளை, மாமியார் அமுதா ஆகியோர் நேற்றுமுன்தினம் மாலை மணிமாறன் வீட்டிற்கு வந்து கதவை திறந்து உள்ளே சென்றபோது, வீட்டின் பின்பக்க கதவு உடைந்திருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர் உடனே மணிமாறனுக்கு  தகவல் கொடுத்தனர். மணிமாறன் நேரில் வந்து பார்த்தபோது 16 பவுன் நகை திருட்டு போனது தெரியவந்தது. இதுகுறித்த புகாரின்பேரில்  வைத்தீஸ்வரன் கோயில் போலீசார்  விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories: