பைக் மோதி மூதாட்டி பலி

ஈரோடு, மே 9: ஈரோடு பெரியசேமூர் தண்ணீர் பந்தல்பாளையம் கிழக்கு வீதியை சேர்ந்தவர் பாவாயம்மாள் (85). இவர், நேற்று வீரப்பன் சத்திரத்தில் உள்ள சமயபுரம் மாரியம்மன் கோயிலுக்கு சாமி கும்பிட சத்தி ரோட்டில் நடந்து சென்று கொண்டிருந்தார்.  அப்போது அந்த வழியாக வந்த பைக், எதிர்பாராத விதமாக பாவாயம்மாள் மீது மோதியது. இதில் பலத்த காயம் அடைந்த அவர் தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று மாலை இறந்தார்.

Related Stories: