ஒட்டன்சத்திரத்தில் மருத்துவ கல்வி கருத்தரங்கம்

ஒட்டன்சத்திரம், மே 8: ஒட்டன்சத்திரத்தில் இந்திய மருத்துவ கழகம் சார்பில் தொடர் மருத்துவ கல்வி கருத்தரங்கம் நடந்தது. மருத்துவர் சின்னச்சாமி தலைமை வகித்தார். பழனி கிளை தலைவர் குணசீலன், அம்பிளிக்கை கிறிஸ்துவ மருத்துவமனை டாக்டர் ஷிலா ஓபிசெரியன், டாக்டர் காசிமுருகபிரபு முன்னிலை வகித்தனர். ஒட்டன்சத்திரம் கிளை செயலாளர் ஆசைத்தம்பி வரவேற்றார்.கிளை துணை தலைவர் டாக்டர் முத்துச்சாமி கருத்தரங்கின் நோக்கம் குறித்து சிறப்புரையாற்றினார். மதுரை இருதய நோய் நிபுணர் டாக்டர் ஜெயபாண்டியன், குழந்தைகள் நல தலைமை டாக்டர் கண்ணன் இருதய நோய் மற்றும் மாரடைப்பு நோயின் அறிகுறிகள், தடுக்கும் முறைகள் குறித்தும், குழந்தைகளுக்கு ஏற்படும் நுரையிரல் நோய்கள், அதை குணப்படுத்தும் முறைகள் குறித்தும் விளக்கி கூறினர். இதில் ஒட்டன்சத்திரம் மற்றும் சுற்றுப்புற பகுதிகளை சேர்ந்த 30க்கும் மேற்பட்ட டாக்டர்கள் கலந்து கொண்டனர். ஏற்பாடுகளை டாக்டர் ரவிச்சந்திரன், மேலாளர் பாண்டியராஜன், துணை மேலாளர் பாலமுருகன் செய்திருந்தனர்.

Related Stories: