பாளையஞ்சாலைக்குமார சுவாமி கோயிலில் நாளை வருண ஜெபம் சிறப்பு வழிபாடு

நெல்லை, மே 8: பாளையஞ்சாலைக்குமார சுவாமி கோயிலில் நாளை மழை வேண்டி வருண ஜெபம் நடக்கிறது. தமிழகத்தில் கோடை வெயில் உக்கிரமாக கொளுத்துகிறது. இதையடுத்து கோயில்களில் வருண ஜெபம் சிறப்பு வழிபாடு நடந்து வருகிறது. நெல்லை சந்திப்பிலுள்ள பாளையஞ் சாலைக்குமார சுவாமி கோயிலில் நாளை (9ம் தேதி)  காலை 8.30 மணிக்கு யாகசாலை பூஜையும், வருண சூக்த ஜெப மந்திர பாராயணமும், வருண காயத்ரி மந்திர ஹோமமும், திருமுறை பாராயணமும், நாதஸ்வர மங்கள அமிர்தவர்ஷனி ராகத்துடன் சிறப்பு வழிபாடுகள் நடக்கிறது. இதனை தொடர்ந்து விநாயகர், மூலவர், சுப்பிரமணியர், சண்முகருக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம், தீபாராதனை நடக்கிறது. ஏற்பாடுகளை கோயில் நிர்வாகத்தினர் செய்து வருகின்றனர்.

Related Stories: