திருவெண்ணெய்நல்லூர், மே 7: திருவெண்ணெய்நல்லூர் அருகே பணம் வைத்து சூதாடிய 6 பேர் மீது வழக்குபதிந்த போலீசார் அவர்களிடம் இருந்து ரூ. 47 ஆயிரத்தை பறிமுதல் செய்தனர். திருவெண்ணெய்நல்லூர் அருகே உள்ள தி.புதுப்பாளையம் கிராமத்தில் ஆயிரக்கணக்கில் பணம் வைத்து சூதாடுவதாக திருவெண்ணெய்நல்லூர் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் சப்- இன்ஸ்பெக்டர் ஞானசேகரன் மற்றும் போலீசார் அப்பகுதிக்கு சென்று சோதனை மேற்கொண்டனர். அதில் அதே ஊரில் உள்ள ஏரிக்கரை அருகே 6பேர் கொண்ட கும்பல் சூதாடியது தெரியவந்தது. இதையடுத்து அவர்களை போலீசார் மடக்கி பிடிக்க முயன்றனர்.