திண்டிவனம், மே 7: திண்டிவனம் அடுத்த உலகாபுரம் கிராமத்தை சேர்ந்தவர் முத்துவேல், கூலி தொழிலாளியான இவரது மகன் ஆகாஷ்(18) தற்போது வெளியான 12ம் வகுப்பில் தேர்ச்சி பெறவில்லை. ஆகையால் பெற்றோர் இவரை டிப்ளமோ நர்சிங் சேர்த்துள்ளனர். இந்நிலையில், நேற்று மதியம் பெற்றோர் ஆகாஷை கண்டித்துள்ளனர். இதனால், மனம் உடைந்த ஆகாஷ் அருகிலிருந்த 90 அடி ஆழமுள்ள விவசாய நிலத்தில் உள்ள கிணற்றில் குதித்துள்ளார். கிணற்றில் 50 அடி தண்ணீர் இருந்துள்ளது. ஆசாசுக்கு நீச்சல் தெரியாததால் தண்ணீரில் மூழ்கினார்.