காடையாம்பட்டி, மே 7: காடையாம்பட்டி அருகே, விமான நிலையத்திற்கு நிலம் கொடுத்தவர்களுக்கு அரசு திட்டத்தில் வீடுகள் கட்டும் பணி நிறுத்தப்பட்டுள்ளதால், அப்பகுதி மக்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர். காடையாம்பட்டி அருகே உள்ள சிக்கனம்பட்டி, தும்பிபாடி, பொட்டியபுரம் ஆகிய கிராமங்களில் விளைநிலங்கள் மற்றும் குடியிருப்புகளை, விமான நிலைய விரிவாக்கத்திற்காக நிலம் எடுக்கும் பணியை அரசு மேற்கொண்டு வருகிறது. இதில் குடியிருப்பு பகுதியில் உள்ள நிலங்களை எடுக்கும் பொதுமக்களுக்கு, அரசே புறம்போக்கு நிலங்களில் வீடு கட்டிக்கொடுக்கும் திட்டத்தை தொடங்கி, வீடு கட்டும் பணிகளை செய்து வருகிறது.