சேலம் ரயிலில் நகை கொள்ளை வடமாநில வாலிபர்களிடம் ஆத்தூர் போலீசார் விசாரணை

ஆத்தூர், மே 7: ஆத்தூர் நகரம் மற்றும் புறநகர் பகுதியில், வட மாநிலத்தை சேர்ந்தவர்கள் வீடு மற்றும் விடுதிகளில் தங்கி போர்வை, ஸ்டவ் உள்ளிட்ட பொருட்களை விற்பனை செய்து வருகின்றனர். சேலம் ரயிலில் நடந்த நகை கொள்ளை சம்பவத்தை தொடர்ந்து, ஆத்தூர் போலீசார் அவர்களது வீடுகளுக்கு நேற்று நேரில் சென்று சோதனை நடத்தினர். அவர்களுடைய முழு விவரங்களை பட்டியல் எடுத்து, போலீஸ் ஸ்டேசனுக்கு அழைத்து சென்று அனைவரிடமும் கைரேகையை பதிவு செய்தனர். மேலும், ஆதார் அட்டை ஆவணங்களையும் ஆய்வு செய்து, அவர்களுக்கும், ரயில் கொள்ளையர்களுக்கும் தொடர்பு உள்ளதா என்பது குறித்து ஆத்தூர் டிஎஸ்பி ராஜூ தலைமையிலான போலீசார் விசாரணை நடத்தினர்.

Related Stories: