ஆத்தூர், மே 7: ஆத்தூர் அம்மம்பாளையம் அம்மன் நகரில் உள்ள ஜெய்வின்ஸ் அகாடமி சிபிஎஸ்இ பள்ளி மாணவர்கள், சிபிஎஸ்இ பிளஸ்2 தேர்வில் அதிக மதிப்பெண்கள் பெற்று சாதனை படைத்துள்ளனர். பள்ளியில் சிபிஎஸ்இ பிளஸ் 2 தேர்வு எழுதிய அனைத்து மாணவர்களும் தேர்ச்சி பெற்று, 100 சதவீகித தேர்ச்சி சாதனையை படைத்துள்ளனர். மாணவி ஹேமபிரியா 463 மதிப்பெண்களும், பிரியங்கா 462 மதிப்பெண்களும், சுந்தர் 458 மதிப்பெண்களும், ஸ்ரீநிசா 457 மதிப்பெண்கள் பெற்று முதல் 4 இடங்களை பெற்று பள்ளிக்கு பெருமை சேர்ந்துள்ளனர்.