காவேரிப்பட்டணம், மே 7: காவேரிப்பட்டணம் அருகே வேனில் கடத்தப்பட்ட ₹1.50 லட்சம் குட்கா பறிமுதல் செய்யப்பட்டது. கிருஷ்ணகிரி மாவட்ட எஸ்.பி. பண்டி கங்காதர் உத்தரவின்பேரில், டிஎஸ்பி பாஸ்கர் மேற்பார்வையில், காவேரிப்பட்டணம் காவல் ஆய்வாளர் சுப்பிரமணி தலைமையிலான போலீசார் போத்தாப்புரம் பகுதியில் தேசிய நெடுஞ்சாலையில் வாகன தணிக்கையியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, பெங்களூருவில் இருந்து சேலம் நோக்கி சென்ற மினி வேனை நிறுத்துமாறு சைகை செய்தனர். இதனைக்கண்டதும் வேனை அப்படியே நடுரோட்டில் நிறுத்தி விட்டு டிரைவர் ஓட்டம் பிடித்தார்.