நத்தத்தில் அடிக்கடி பழுதாகும் அரசு பஸ்கள் மண்டைகாயும் பயணிகள்

நத்தம், மே 3: திண்டுக்கல் நத்தம் சாலையில் அடிக்கடி பழுதாகி நிற்கும் பேருந்தால் பயணிகள் அவதிப்பட்டு வருகின்றனர். மதுரை, சிவகங்கை, திண்டுக்கல், நத்தம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளுக்கு சாணார்பட்டி வழியாக பேருந்துகள் இயக்கப்படுகின்றன. இப்பேருந்துகள் நத்தம் மற்றும் திண்டுக்கல் பணிமனைகளில் இருந்து இயக்கப்படுகின்றன இதில் திண்டுக்கல்லில் இருந்து மதுரை, சிவகங்கை செல்லும் பேருந்துகள் அடிக்கடி பழுதாகி நடுரோட்டில் நின்று விடுகின்றன.  வெயில் நேரங்களில் ரோட்டில் பழுதாகி பேருந்து நிற்பதால் பயணிகள் மிகவும் சிரமப்படுகின்றனர். செல்ல வேண்டிய இடத்திற்கு உரிய நேரத்தில் செல்ல முடியவில்லை. அடுத்த பேருந்து வரும் வரை மொட்டை வெயிலில் காத்திருக்க வேண்டியுள்ளது. எனவே மிகவும் பழைய பேருந்துகளை மாற்றி விட்டு புதிய பேருந்துகள் இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பயணிகள் அரசுக்கு கோரிக்கை வைத்துள்ளனர்.

Related Stories: