பிரதோஷ வழிபாடு

தேவதானப்பட்டி, மே 3: மேல்மங்கலம் வராகநதி ஆற்றங்கரையில் அமைந்துள்ள மாயாபாண்டீஸ்வரர் கோயிலில் பிரதோஷ வழிபாடு நிகழ்ச்சி நடைபெற்றது. மாயாபாண்டீஸ்வரர், பிருகன்நாயகி அம்மாள், விநாயகர், முருகன், தட்சணாமூர்த்தி, நடராஜர், சிவகாமி அம்மாள், மாணிக்கவாசகர், துர்க்கை உள்ளிட்ட பரிவார மூர்த்திகளுக்கு மஞ்சள்பொடி, மாபொடி, திருமஞ்சனதிரவியம், பால், தயிர், இளநீர், தேன், விபூதி, பஞ்சாமிர்தம், பழவகைகள் உள்ளிட்டவைகளால் அபிஷேகம், தீபாராதனைகள் நடைபெற்றது.

Related Stories: