மேலூர் அருகே வீட்டிற்கு தீ வைப்பு?

மேலூர், மே 1: மேலூர் அருகே பட்டூரை சேர்ந்தவர் கருப்பையா (45). மைக் செட், கொட்டகை போடும் பணி செய்து வந்தார். நேற்று வெளியூர் சென்ற நேரத்தில் இவரது வீடு திடீரென தீப்பிடித்து எரிய துவங்கியது. தகவலறிந்ததும் மேலூர் தீயணைப்புப்படையினர் வந்து கிராமமக்கள் உதவியுடன் தீயை அணைத்தனர். தீ விபத்தில் வீட்டிலிருந்த லட்சம் மதிப்பிலான மைக் செட் பொருட்கள், ஜெனரேட்டனர் போன்றவை எரிந்து சாம்பலாயின. இதே ஊரை சேர்ந்த ஆண்டிக்கும், கருப்பையாவிற்கும் முன்விரோதம் இருந்ததாகவும், அதனால் அவர் வீட்டிற்கு தீ வைத்திருக்கலாம் என புகார் செய்யப்பட்டது. இதுகுறித்து மேலவளவு போலீசார் விசாரிக்கின்றனர்.

Related Stories: