திருக்கோவிலூர், மே 1: திருக்கோவிலூர் அருகே திருமணமான இரண்டு மாதத்தில் இளம்பென் தற்கொலை செய்தது தொடர்பாக கணவர் உள்பட 4 பேர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.திருவண்ணாமலை மாவட்டம் கீழ்பென்னாத்தூரை அடுத்த கெங்கம்பட்டு கிராமத்தை சேர்ந்த அருள்தாஸ் மகள் பிலோமினாள் (28). ஆசிரியை பயிற்சி முடித்துள்ளார். இவருக்கும், திருக்கோவிலூர் அடுத்த நெடுங்கப்பட்டு கிராமத்தை சேர்ந்த இமானுவேல் மகன் ஆனந்தராஜ் (31) என்பவருக்கும் இடையே கடந்த பிப்ரவரி 17ம் தேதி திருமணம் நடந்தது. ஆனந்தராஜ் ஓட்டலில் வேலைபார்த்து வருகிறார். இந்நிலையில் கணவன், மனைவிக்கு இடையே அடிக்கடி குடும்ப தகராறு இருந்து வந்ததாக கூறப்படுகிறது. மேலும் ஆனந்தராஜ் குடும்பத்தினர் பிலோமினாளிடம் வரதட்சணை கேட்டு சித்ரவதை செய்ததாக தெரிகிறது.