மணல் திருடிய 5 பேர் கைது

திருக்கோவிலூர், ஏப். 25: திருக்கோவிலூர் அடுத்த வீரசோழபுரம் கிராமத்தில் தென்பெண்ணை ஆற்றில் அனுமதியின்றி மணல் திருட்டு நடைபெறுவதாக அரகண்டநல்லூர் போலீசாருக்கு தகவல் வந்தது. இதையடுத்து சப்-இன்ஸ்பெக்டர் சுப்ப ஆனந்த் மற்றும் போலீசார் அப்பகுதியில் அதிரடி சோதனை மேற்கொண்டனர். அப்போது அவ்வழியாக அனுமதியின்றி மாட்டு வண்டிகளில் மணல் ஏற்றி வந்த 5 பேரை கையும் களவுமாக பிடித்து விசாரணை செய்ததில் அவர்கள் அப்பனந்தல் கிராமத்தை சேர்ந்த பாஷா(25), திருநள்ளான்(28), சத்தியகண்டானூர் கிராமத்தை சேர்ந்த மணி(35), கர்ணன்(40), லட்சுமணன்(32) என்பது தெரியவந்தது. அவர்களை கைது செய்து மணலுடன் 5 மாட்டுவண்டிகளை பறிமுதல்  செய்தனர்.

Related Stories: