மரக்காணம், ஏப். 25: மரக்காணம் ஒன்றியத்திற்குட்பட்டது நகர், நல்லம்பாக்கம் கிராமங்கள். இப்பகுதியைச் சுற்றிலும் 10க்கும் மேற்பட்ட கிராமங்கள் உள்ளது. இதில் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் வசிக்கின்றனர். இவர்களில் பெரும்பாலானோர் விவசாயிகள் ஆவர். இங்குள்ளவர்கள் புதுவை, மரக்காணம், சென்னை ஆகிய பகுதிகளுக்கு இவ்வழியாகத் தான் செல்லவேண்டும். இது போல் இப்பகுதியில் விளையும் அனைத்து விவசாய பொருட்களையும் இவ்வழியாகவே எடுத்துசென்று வெளியிடங்களில் விற்பனை செய்யவேண்டும். இப்பகுதிக்கான தார் சாலை கடந்த மூன்று ஆண்டுகளுக்கு முன் பல லட்சம் ரூபாய் செலவில் போடப்பட்டது. ஆனால் இந்த சாலையை மேற்கொண்டு அதிகாரிகள் பராமரிப்பு செய்யவில்லை. இதனால் இச்சாலை தற்போது முற்றிலும் சேதமடைந்து கரடு முரடாக காணப்படுகிறது.