மாட்டு வண்டியில் மணல் கடத்திய 3 பேர் கைது

உளுந்தூர்பேட்டை,  ஏப். 25: உளுந்தூர்பேட்டை சப்-இன்ஸ்பெக்டர் மாயகிருஷ்ணன்  மற்றும் போலீசார் காவல்நிலையத்திற்கு உட்பட்ட பகுதியில் தீவிர ரோந்து  பணியில் ஈடுபட்டனர். அப்போது களவனூர் ஆற்றில் இருந்து டயர்  மாட்டு வண்டிகளில் மணல் கடத்தி வந்த நாராயணசாமி(42), பாலு(27), சுப்ரமணி(44)  ஆகிய 3 பேரை கைது செய்தனர். மேலும் மணல் கடத்தலுக்கு பயன்படுத்திய 3 டயர்  மாட்டு வண்டிகளையும் பறிமுதல் செய்தனர். தொடர்ந்து மணல் கடத்தலில்  ஈடுபடுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என போலீசார்எச்சரிக்கை செய்துள்ளனர்.

Related Stories: