பிளஸ் 2 பொதுத்தேர்வில் கே.எஸ்.ஆர் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி சாதனை

திருச்செங்கோடு, ஏப்.25: பிளஸ் 2 தேர்வில் கே.எஸ்.ஆர் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் தேர்வு எழுதிய 197 மாணவ, மாணவிகள் 100 சதவீத தேர்ச்சி பெற்று சாதனை படைத்துள்ளனர். இப்பள்ளி மாணவர்கள் முறையே 580, 572, 566 மதிப்பெண்களை பெற்று முதல் 3 இடங்களை பெற்றுள்ளனர். மேலும், 600க்கு 550க்கு மேல் 9 பேரும், 500 மதிப்பெண்களுக்கு மேல் 36 பேரும், 450க்கு மேல் 64 பேரும் மதிப்பெண்கள் பெற்றுள்ளனர். கணினி அறிவியலில் 7 பேரும், கணக்கு பதிவியல் பாடத்தில் இருவரும் 100க்கு 100 மதிப்பெண் பெற்றுள்ளனர். தமிழில் இருவரும், கணிதத்தில் ஒருவரும், வணிகவியலில் இருவரும் 99 மதிப்பெண்களை பெற்றுள்ளனர். ஆங்கிலப்பாடத்தில் ஒருவரும், பொருளாதாரத்தில் ஒருவரும் 98 மதிப்பெண் பெற்றுள்ளனர். சாதனை படைத்த மாணவ, மாணவிகளை தாளாளர் ரங்கசாமி, இயக்குனர் அமுதா ஆசைத்தம்பி ஆகியோர் பாராட்டினர். தொடர்ந்து, 11ம் வகுப்பிற்கான மாணவர் சேர்க்கை ஏப்ரல் 29ம் தேதி முதல் நடைபெறும் என்று பள்ளி நிர்வாகத்தினர் தெரிவித்தனர்.

Related Stories: