திருப்புவனம், ஏப்.25: திருப்புவனம் அருகே செங்குளத்தை சேர்ந்தவர் ஆறுமுகம் (33). இவர் மதுரை ஜெய்ஹிந்த் புரத்தில் வசித்து வந்தார். செங்குளத்திற்கு ஓட்டுப்போட வந்த ஆறுமுகம் கடந்த 18ந்தேதி இரவு நெடுங்குளம் ரோட்டில் டூவீலரில் தனது நான்கு வயது மகன் ராஜதுரையுடன் சென்றார். அப்போது மர்ம நபர்களால் கொடூரமாக வெட்டிக் கொலை செய்யப் பட்டார். முகத்தை வெட்டி சிதைத்த நிலையில் தப்பி ஓடிவிட்டனர். மகன் முன்னிலையிலேயே தந்தை ஆறுமுகம் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் இப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.