முன்விரோத தகராறில் ஒருவர் மீது தாக்குதல்

திருக்கோவிலூர், ஏப். 24: திருக்கோவிலூர் அருகே ஆவிகொளப்பாக்கம் கிராமத்ைத சேர்ந்தவர் சுந்தரமூர்த்தி (46). சம்பவத்தன்று இவரும், அதே ஊரை சேர்ந்த குமார் மற்றும் ஏழுமலை ஆகியோர் அங்குள்ள கோயில் அருகே பேசிக்ெகாண்டிருந்தனர். அப்போது அங்கு வந்த ஏழுமலை (40), காமராஜ் (34) ஆகியோர் முன்விரோதம் காரணமாக சுந்தரமூர்த்தியை ஆபாசமாக திட்டி தாக்கி கோயில் சிலை பாகங்களை உடைத்து சேதப்படுத்தி உள்ளனர்.

இதுகுறித்து சுந்தரமூர்த்தி திருக்கோவிலூர் போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார், ஏழுமலை, காமராஜ் ஆகிய 2 பேர் மீது வழக்கு பதிந்து ஏழுமலையை கைது செய்தனர்.

Related Stories: