திருப்பூர், ஏப். 24:திருப்பூர் பி.என்.ரோடு பாண்டியன் நகர் பகுதியில் உள்ள ஒரு பெட்டிக்கடையில் புகையிலை பொருட்கள் விற்பனை செய்யப்படுவதாக வந்த தகவலையடுத்து, சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற திருமுருகன்பூண்டி போலீசார், அக்கடையில் சோதனையிட்டு, புகையிலை விற்பனைக்கு வைத்திருந்த கடை உரிமையாளரான கார்த்திக் (25) என்பவரை கைது செய்து, 120 பாக்கெட் புகையிலை பொருட்களை பறிமுதல் செய்தனர்.
15 வேலம்பாளையம் மணீஸ் தியேட்டர் அருகே கஞ்சா விற்பனை செய்யப்படுவதாக வந்த தகவலையடுத்து, 15 வேலம்பாளையம் போலீசார் அப்பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டு, கஞ்சா விற்பனைக்கு வைத்திருந்த திருப்பூர் கவுண்டம்பாளையத்தை சேர்ந்த மோகன்குமார் (50) என்பவரை கைது செய்து, 100 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.