பொம்மியம்மாள் கோவிலில் மழை பெய்ய வேண்டி சிறப்பு பூஜை

வருசநாடு, ஏப்.24:  வருசநாடு அருகே மலைக்கோயிலில் மழை வரம் வேண்டி பொதுமக்கள் சிறப்பு பூஜை நடத்தினர். வருசநாடு அருகே அரசரடி பொம்முராஜபுரம் மலைப்பகுதியில் பொம்மியம்மாள் மலைக்கோவில் உள்ளது. இந்த கோவிலில் அனைத்து சமுதாய மக்களும் ஒன்றுகூடி மழை வரம் வேண்டி சிறப்பு பூஜைகள்   நடத்தினர். இதனைத் தொடர்ந்து  சர்க்கரைப்பொங்கல் வைத்தல், பானகரம் படைத்தல், அன்னதானம் வழங்குதல் போன்ற நிகழ்ச்சிகள் நடைபெற்றன. இதற்கான ஏற்பாடுகளை கோவில் பூசாரி காசி, கிராம முக்கியஸ்தர்கள் மணிகண்டன், மகேந்திரன் மற்றும் விழாக்குழுவினர்,  பொம்மராஜபுரம், அரசரடி கிராம பொதுமக்கள் செய்திருந்தனர்.

Related Stories: