ஊட்டி, ஏப்.22: ஈஸ்டர் பண்டிகையை முன்னிட்டு ஊட்டியில் உள்ள கிறிஸ்தவ தேவாலயங்களில் நேற்று சிறப்பு பிரார்த்தனைகள் நடந்தது.
கிறிஸ்தவ மக்களின் முக்கிய பண்டிகையாக ஈஸ்டர் பண்டிகை உலகம் முழுவதும் நேற்று கொண்டாடப்பட்டது. ஈஸ்டருக்கு முந்தைய 40 நாட்கள் தவக்காலமாக கிறிஸ்தவ மக்களால் கடைபிடிக்கப்படுகிறது. தவக்காலத்தின் கடைசி வாரம் புனித வாரமாக கடைபிடிக்கப்படுகிறது. இதையொட்டி குருத்தோலை பவனி உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகள் நடந்தது. தொடர்ந்து இயேசு உயிர்தெழுந்த நாள் ஈஸ்டர் பண்டிகையாக கொண்டாடப்படுகிறது. ஈஸ்டர் பண்டிகையை முன்னிட்டு ஊட்டி தூய இருதய ஆண்டவர் ஆலயத்தில் நேற்று நள்ளிரவு ஈஸ்டர் தின பிரார்த்தனை மற்றும் கூட்டு திருப்பலி நிகழ்ச்சி நடந்தது.