அதிமுக, அமமுக அடிதடி 3 பேர் காயம்

பேரையூர், ஏப். 19:சேடபட்டி அருகேயுள்ளது காளப்பன்பட்டி. இங்குள்ள வாக்குச்சாவடி அருகே அதிமுக வினரும், அமமுக வினரும், தங்களது சின்னங்களுக்கு க்களிக்குமாறு வாக்காளர்களிடம் ரகசியமாக வாக்குச் சேகரித்தனர். இதில் அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டது. இதில் ஒருவரையொருவர் கற்களால் எறிந்து தாக்கியதாக கூறப்படுகிறது.இதில் காளப்பன்பட்டியைச் சேர்ந்த அதிமுக கிளைச் செயலாளர் சின்னக்கருப்பன் மகன் ஓசை என்ற கிருஷ்ணன் (54), இவரது மகன் கருப்பசாமி (25), அமமுக கிளைச்செயலாளர் கம்மாளப்பட்டியைச் சேர்ந்த ஆண்டி (30) ஆகிய மூன்று பேருக்கும் காயம் ஏற்பட்டது. இது சம்மந்தமாக சேடபட்டி போலீசார் இருதரப்பினர்களையும் அழைத்து விசாரித்து வருகின்றனர்.

Related Stories: