3 குழந்தைகளின் தாய் தற்கொலை

உளுந்தூர்பேட்டை, ஏப். 19: உளுந்தூர்பேட்டை அருகே கல்சிறுநாகலூர் கிராமத்தை சேர்ந்தவர் ரங்கராஜ்(50). இவருடைய மகள் சங்கீதா(30) என்பவரை எ.கொளத்தூர் கிராமத்தை சேர்ந்த கண்ணன் என்பவருக்கு கடந்த 15 ஆண்டுகளுக்கு முன் திருமணம் செய்து கொடுத்தார். இதில் இவர்களுக்கு 3 குழந்தைகள் உள்ளது. இந்நிலையில் குடும்ப பிரச்னை காரணமாக சங்கீதா சம்பவத்தன்று விஷ விதையினை சாப்பிட்டு மயங்கி விழுந்து கிடந்தார். உடன் அங்கிருந்தவர்கள் அவரை மீட்டு கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. பின்னர் மேல் சிகிச்சைக்காக விழுப்புரம் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு அங்கு சங்கீதாவுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. இந்நிலையில், சிகிச்சை பலனின்றி சங்கீதா உயிரிழந்தார். இதுகுறித்து எலவனாசூர்கோட்டை காவல்நிலையத்தில் ரங்கராஜ் கொடுத்த புகாரின் பேரில் சப்- இன்ஸ்பெக்டர் நாகராஜ் வழக்கு பதிந்து விசாரணை செய்து வருகிறார்.

Related Stories: