ஓசூர், ஏப்.18: ஓசூரில் முன்னாள் நகராட்சி கவுன்சிலர் வீட்டில், நேற்றிரவு வருமான வரித்துறையினர் திடீர் சோதனை நடத்தினர். இந்த சோதனையில் பணம் மற்றும் ஆவணங்கள் ஏதும் சிக்கவில்லை. ஓசூர் முனீஸ்வரர் நகரைச் சேர்ந்தவர் முன்னாள் நகராட்சி கவுன்சிலர் இளையபெருமாள். நகராட்சியில் சிறு சிறு திட்டப்பணிகளை கான்ட்ராக்ட் எடுத்து செய்து வருகிறார். இவர் சுயேட்சையாக போட்டியிட்டு நகராட்சி கவுன்சிலர் ஆனவர். இந்நிலையில் நேற்று இரவு 9 மணியளவில், ஓசூர் வருமான வரித்துறையினர், திடீரென இளையபெருமாள் வீட்டுக்கு வந்து சோதனையிட்டனர். சுமார் அரைமணி நேர சோதனையில், அவரது வீட்டில் பணமோ, ஆவணங்களோ கிடைக்கவில்லை. இதையடுத்து, வருமான வரித்துறை அதிகாரிகள், பக்கத்தில் உள்ள இளைய பெருமாளின் அண்ணன் பூபதி வீட்டிற்கு சென்ற சோதனையிட்டனர்.