தீக்குளித்து பெண் தற்கொலை

விருத்தாசலம், ஏப். 18: விருத்தாசலம் தீர்த்தமண்டப தெருவை சேர்ந்தவர் கார்த்திக் மனைவி உமா மகேஸ்வரி (25). இவருக்கு திருமணமாகி ஐந்து வருடங்கள் ஆகிறது. இவர் நீண்ட நாளாக தலைவலியால் அவதிப்பட்டு வந்துள்ளார். இதற்காக சிகிச்சை பெற்றும் குணமாகவில்லை. இதனால் விரக்தி அடைந்த மகேஸ்வரி, கடந்த 11ம் தேதி வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் மண்ணெண்ணெய்யை ஊற்றி தீ வைத்துக் கொண்டார். உறவினர்கள் அவரை மீட்டு விருத்தாசலம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். பின்னர் மேல்சிகிச்சைக்காக சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இந்நிலையில் சிகிச்சை பலனின்றி உமா மகேஸ்வரி இறந்தார். இதுகுறித்து அவரது உறவினர் புவனேஸ்வரி கொடுத்த புகாரின்பேரில், விருத்தாசலம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். திருமணமாகி 5 ஆண்டுகளே ஆவதால் சார் ஆட்சியர் விசாரணை

மேற்கொண்டுள்ளார்.

Related Stories: