பல்வேறு இடங்களில் திடீர் மின்நிறுத்தம்

கடலூர், ஏப். 18: நாடாளுமன்றத் தேர்தல் இன்று நடக்க உள்ளது. கடலூர் மாவட்டத்தில் வாக்காளர்களுக்கு பணம் கொடுக்கப்படுவதை தடுக்க பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை எடுத்துள்ளதாக மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது.இந்நிலையில் கடலூர் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இரவு நேரங்களில் மர்ம வாகனங்கள் வந்து சென்றதாகதகவல்கள் தெரிவிக்கின்றன. இது மட்டுமின்றி கடலூர் மற்றும் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் நேற்று முன்தினம் இரவு திடீரென்று மின்சாரம் நிறுத்தப்பட்டு இருள் சூழ்ந்தது. கடந்த சில வாரங்களாகவே மின்வெட்டு இல்லாத நிலையில் நேற்று முன்தினம் இரவு திடீரென மின் விநியோகம் நிறுத்தப்பட்டது. இது பொதுமக்கள் மத்தியில் பரபரப்பையும், பல்வேறு சந்தேகங்களையும் ஏற்படுத்தியது. இந்நிலையில் வீடு வீடாக சென்று வெளிப்படையாகவே பணம் விநியோகிக்கப்படுவதை தடுக்க மாவட்ட நிர்வாகம் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை என்ற குற்றச்சாட்டையும் பல்வேறு கட்சியினர் முன் வைத்துள்ளனர்.

Related Stories: