ஓசூரில் பல்வேறு வழக்குகளில் தேடப்பட்ட பிரபல ரவுடி கொற கோபி கைது

ஓசூர்,ஏப்.17: ஓசூர் ராம் நகரைச் சேர்ந்தவர் கொற கோபி (52) பிரபல ரவுடி. இவர் மீது டிவி அதிபர்கள் தென்னரசு, மணி, ராம் நகர் நூருல்லா, பிரபல ரவுடி சேட்டு ஆகியோரை கொலை செய்த வழக்கு, கொள்ளை, ஆள் கடத்தல் உள்பட 30க்கும் மேற்பட்ட வழக்குகள் உள்ளன. கடந்த 2013ம் ஆண்டு ஓசூர் அருகே மரக்கடை அதிபர் முனிராஜை ₹1 கோடி கேட்டு கடத்திய வழக்கில் நீதிமன்றத்தில் ஆஜர் ஆகாமல் தலைமறைவாக இருந்தார். இதனால் கொற கோபிக்கு பிடிவாரண்ட் பிறப்பிக்கப்பட்டிருந்தது.  இந்நிலையில், தலைமறைவாக இருந்த கொற கோபியை ஓசூர் போலீசார் நேற்று கைது செய்து, ஓசூர் ஜே.எம்.2 நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சேலம் மத்திய சிறையில் அடைத்தனர். 

Related Stories: