முதியவர் மீது தாக்குதல்

திருக்கோவிலூர், ஏப். 17:  திருக்கோவிலூர் அடுத்த வீரப்பாண்டி கிராமத்தை சேர்ந்தவர் தேவராஜ்(67). இவரது நிலத்தில் கிணறு வெட்டும் பணி நடைபெற்றது. அப்போது கிணற்றில் இருந்த தண்ணீர் மற்றும் கற்கள் அதே பகுதியை சேர்ந்த சங்கர் நிலத்தில் விழுந்தது. இதனால் ஆத்திரமடைந்த சங்கரும், அவரது மனைவி செல்வியும் சேர்ந்து தேவராஜை ஆபாசமாக திட்டி தாக்கி கொலை மிரட்டல் விடுத்துள்ளனர். இதுகுறித்து தேவராஜ் கொடுத்த புகாரின்பேரில் அரகண்டநல்லூர் போலீசார், சங்கர், அவரது மனைவி செல்வி ஆகிய இருவர் மீதும் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories: