கிருஷ்ணகிரி,ஏப்.16: கிருஷ்ணகிரியில் சுட்டெரிக்கும் வெயிலால் பொதுமக்கள் கடும் அவதிக்குள்ளாகி உள்ளனர். இதனால் தர்பூசணி, நுங்கு, இளநீர் விற்பனை ஜோராக நடந்து வருகிறது. கிருஷ்ணகிரியில் கடந்த பிப்ரவரி மாதம் முதலே வெயில் சுட்டெரித்து வருகிறது. கடந்த மாதம் வெயில் 104 டிகிரியை தாண்டி அடித்தது. இந்த மாதமும் தொடங்கிய நாள் முதல் இன்று வரையில் வெயில் சுட்டெரித்து தினமும் 100 டிகிரியை தாண்டி வெயில் அடிப்பதால் மக்கள் மிகவும் சிரமப்படுகிறார்கள். இதனால் பொதுமக்கள் பகல் நேரத்தில் வெளியே வர முடியாமல் வீட்டிலேயே முடங்கி கிடக்கிறார்கள்.வெயில் காரணமாக தர்பூசணி பழங்கள், நுங்கு, இளநீர், பதனீர் விற்பனை ஜோராக நடந்து வருகிறது.