குறிஞ்சிப்பாடி, ஏப். 16: அயன்குறிஞ்சிப்பாடி கிராமத்தில் பழமையான முத்தாலம்மன் கோயில் தீர்த்த குளத்தை தூர்வாரி, நீர்வழிப்பாதை ஆக்கிரமிப்பு அகற்றவேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளர்.குறிஞ்சிப்பாடிபேரூராட்சிக்குட்பட்ட அயன்குறிஞ்சிப்பாடி கிராமத்தில் பழமையான முத்தாலம்மன் கோயில் உள்ளது. இக்கோயில் தீர்த்த குளம் கடந்த சில ஆண்டுகளாக தூர்வாரப்படவில்லை. இதனால் கருவேல மரங்கள், செடி, கொடிகள் வளர்ந்து புதர்மண்டி காட்சியளிக்கிறது. இதனை தூர்வாரி சீரமைக்க வேண்டும், ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும் என்று இப்பகுதி மக்கள் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர். இருந்தும், இதுவரை நடவடிக்கை எடுக்கவில்லை.இதுகுறித்து அயன்குறிஞ்சிப்பாடியை சேர்ந்த பொதுமக்கள் கூறுகையில், முத்தாலம்மன் கோயிலுக்கு சொந்தமான சுமார் 1 ஏக்கர் பரப்பளவு கொண்ட தீர்த்த குளம் உள்ளது. இக்குளத்திற்கு கடந்த காலங்களில் நெய்வேலி என்எல்சி சுரங்க நீர், செங்கால் ஓடை வழியாக வந்தது. தற்போது அந்த நீர்வழிப் பாதையை ஆக்கிரமிப்பு செய்துள்ளனர்.