சிவகங்கை, ஏப். 10: துரோகத்திற்கு பெயர் போனவர்கள் ஓபிஎஸ், ஈபிஎஸ் என டிடிவி தினகரன் பேசினார். சிவகங்கையில் அமமுக வேட்பாளர் தேர்போகிபாண்டியை ஆதரித்து அவர் பேசியதாவது: சிவகங்கை மண் ராஜ விசுவாசத்திற்கு பெயர் போன மண். ஆனால் தமிழ்நாட்டில் துரோகத்திற்கு பெயர் போனவர்கள் எடப்பாடி பழனிச்சாமியும், ஓ.பன்னீர்செல்வமும். மோடி தான் அதிமுகவிற்கு பொதுச் செயலாளராக உள்ளார். நான்காம் கிளாஸ் படித்தவரெல்லாம் அமைசச்ராக இருக்கின்றனர். டாடி என்ற வார்த்தைக்கு அர்த்தம் தெரியாமல் மோடியை, டாடி என்கின்றனர். முன்னாள் முதல்வர் ஜெயலலிதா உயிரோடு இருக்கும்போது யாரோடு கூட்டணி வைக்க கூடாது என கூறினாரோ அவர்களோடு கூட்டணி வைத்துக்கொண்டு இது அம்மாவின் ஆட்சி என்கின்றனர். வேண்டுமானால் எடப்பாடி அம்மாவின் ஆட்சி என்றுதான் கூற வேண்டும்.