சூளகிரி பிடிஓ அலுவலகத்தில் வாக்குப்பதிவு இயந்திரங்களுக்கு துப்பாக்கி போலீஸ் பாதுகாப்பு

சூளகிரி, ஏப்.9:  நாடாளுமன்ற தேர்தலையொட்டி, கிருஷ்ணகிரி தொகுதிக்குட்பட்ட ஊத்தங்கரை, பர்கூர், கிருஷ்ணகிரி, வேப்பனஹள்ளி, தளி மற்றும் ஓசூர் ஆகிய 6 சட்டமன்ற தொகுதிகளுக்கும் மின்னணு வாக்குப்பதிவு இந்திரங்கள் அனுப்பி வைக்கப்பட்டது. அதன்படி, வேப்பனஹள்ளி சட்டமன்ற தொகுதியில் உள்ள வாக்குச்சாவடி மையங்களுக்கு தேவையான 301 மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள், கன்ட்ரோல் யூனிட்கள் மற்றும் விவி பேட் ஆகியவையும், கூடுதலாக 15 சதவீத வாக்குப்பதிவு இயந்திரங்கள், 18 சதவீதம் விவி பேட் இயந்திரங்களும் அனுப்பப்பட்டது. அவ்வாறு அனுப்பப்பட்ட இயந்திரங்கள் சூளகிரி வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் தனி அறையில் வைத்து சீல் வைக்கப்பட்டுள்ளது. அந்த அறைக்கு 24 மணி நேரமும் பாதுகாப்பிற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. துப்பாக்கி ஏந்திய போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.  

Related Stories: