கள்ளக்குறிச்சி, ஏப். 3: கள்ளக்குறிச்சி நகராட்சி பகுதி 4வது வார்டு காட்டுபுரிதர்கா பகுதியில் 150க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். அப்பகுதியில் வசிக்கும் மக்களுக்கு நகராட்சி நிர்வாகம், தெரு பைப்லைன் மூலம் கூட்டு குடிநீர் திட்டத்தின் கீழ் குடிநீர் விநியோகம் செய்து வந்தனர். கடந்த சில மாதங்களாக அப்பகுதி மக்களுக்கு குடிநீர் விநியோகம் செய்யாததால் அவதிப்பட்டு வரும் மக்கள், வெகு தூரம் சென்று குடிநீர் எடுத்து வந்து பயன்படுத்தி வருகின்றனர். சிலர் குடிநீரை விலைக்கு வாங்கி பயன்படுத்தி வருகின்றனர். குடிநீர் தட்டுப்பாட்டை போக்கிட நடவடிக்கை எடுக்க வேண்டி கள்ளக்குறிச்சி நகராட்சி அதிகாரிகளிடம் அப்பகுதி மக்கள் புகார் தெரிவித்தும் நகராட்சி அதிகாரிகள் எந்த நடவடிக்கையும் எடுக்க முன்வராமல் அலட்சியம் காட்டி வருவதாக மக்கள் குற்றம்சாட்டுகின்றனர்.