திண்டுக்கல், மார்ச் 29: திண்டுக்கல் பாலகிருஷ்ணாபுரத்தில் பல ஆண்டுகளாக இழுத்தடிக்கப்பட்டு வரும் ரயில்வே பாலப்பணியை விரைந்து முடிக்க வேண்டும் என வாகனஓட்டிகள் ேகாரிக்கை விடுத்துள்ளனர். திண்டுக்கல் - சிலுவத்தூர் ரோட்டில் மணக்காட்டூர் செந்துரை வரைக்கும் செல்லும் மாநில நெடுஞ்சாலை உள்ளது. இந்த வழித்தடத்தில் உள்ள பாலகிருஷ்ணாபுரத்தில் பழநி, கரூர், சென்னை மார்க்கமாக செல்லும் 3 ரயில்வே லைன்கள் குறுக்கிடுகின்றன. இந்த ரயில்வே லைனை கடக்க முடியாமல் வாகனஓட்டிகள் தினமும் அவதிப்பட்டு வந்தனர். இதனால் இந்த 3 ரயில்வே லைனையும் இணைத்து பாலம் கட்டுவதற்கு பல ஆண்டுகளாக பொதுமக்கள் கோரிக்கை வைத்து வந்தனர். இதை ஒருவழியாக ஏற்று மத்திய, மாநில அரசுகள் சார்பில் ரூ.56 கோடி ஒதுக்கப்பட்டு பணிகள் நடந்து வருகிறது. ஒரு கிமீ தூரத்திற்கு இப்பாலம் அமைய உள்ளது. நிலத்தின் உரிமையாளர்களுக்கு பணம் பட்டுவாடா ஆகாததால் தற்போது பாலத்தின் பணிகள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இதனால் பொதுமக்கள் பால வேலையை விரைந்து முடிக்கவும், நிலத்தின் உரிமையாளர்கள் பணம் கேட்டும் தொடர்ந்து போராட்டங்கள் நடத்தி வருகின்றனர். ஒரு வழியாக தற்போது பணம் பட்டுவாடாவிற்கான செக் நிலத்தின் உரிமையாளரந்களிடம் வழங்கப்பட்டு வருகிறது.