ஆத்தூர், மார்ச் 26: கள்ளக்குறிச்சி நாடாளுமன்ற தொகுதிக்குட்பட்ட ஆத்தூர், கெங்கவல்லி சட்டமன்ற தொகுதி திமுக கூட்டணி கட்சிகளின் செயல்வீரர்கள் கூட்டம், சேலம் கிழக்கு மாவட்ட திமுக பொறுப்பாளர் வீரபாண்டி ராஜா தலைமையில் நடைபெற்றது. கூட்டத்தில் கலந்து கொண்ட திமுக வேட்பாளர் கௌதம சிகாமணி பேசுகையில்,‘வரும் ஏப்ரல் 18ம் தேதி நாம் செய்யக்கூடிய ஒருவிரல் புரட்சியால், மோடியை வீட்டிற்கு அனுப்புவது; பிரதமராக ராகுல்காந்தியை அமர்த்துவது; எடப்பாடி அரசை வீட்டிற்கு அனுப்புவது; திமுக தலைவர் ஸ்டாலினை முதல்வராக்குவது ஆகியவை நடக்கவுள்ளது. நம்முடைய கூட்டணி கட்சியினர், இன்னும் 20 தினங்களுக்குள் தங்களின் வாக்குச்சாவடி பகுதியிலே தங்கியிருந்து, திமுகவின் தேர்தல் அறிக்கையில் சுட்டிக்காட்டியுள்ள திட்டங்களை எடுத்துக்கூறி, வாக்குகளை சேகரிக்கும் பணியில் ஈடுபட வேண்டும்,’ என்றார்.