வாக்குச்சாவடி அலுவலர்களுக்கு பயிற்சி

திருக்கோவிலூர், மார்ச் 26: விழுப்புரம் பாராளுமன்ற தொகுதிக்

குட்பட்ட திருக்கோவிலூர் சட்டமன்ற தொகுதியில் உள்ள வாக்குச்சாவடியில் பணிபுரிய உள்ள வாக்குச்சாவடி அலுவலர்களுக்கான பயிற்சி வகுப்பு திருக்கோவிலூரில் நடந்தது. உதவி தேர்தல் நடத்தும் அலுவலர் தலைமையில் மண்டல அலுவலர்கள் மூலம் நடத்தப்பட்ட இந்த பயிற்சி வகுப்பில் கலந்து கொண்ட அரசு அலுவலர்கள், ஆசிரியர்கள் ஆகியோருக்கு வாக்குப்பதிவின் போது தங்கள் வாக்கினை பதிவு செய்வது, 100சதவிகிதம் வாக்குப்பதிவு நடத்துவது.  தாங்கள் பணிபுரியும் இடத்திலேயே எவ்வாறு வாக்கு பதிவு செய்வது, வாக்குப்பதிவு இயந்திர பயன்பாடு குறித்தும் பயிற்சி அளிக்கப்பட்டது. இந்த பயிற்சியினை ஆட்சியர் சுப்பிரமணியன் ஆய்வு செய்தார். அப்போது சார்ஆட்சியர் சாரு, வட்டாட்சியர்கள் சிவசங்கரன், சீனுவாசன், இளவரசன், ஜெயலட்சுமி, துணை வட்டாட்சியர்கள் கிருஷ்ணமூர்த்தி, ராமகிருஷ்ணன் மற்றும் வருவாய் ஆய்வாளர்கள், கிராம நிர்வாக அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

Related Stories: