ஆக்கிரமிப்புகளை அகற்றக்கோரி சார் ஆட்சியரிடம் மக்கள்A மனு

திண்டிவனம், மார்ச் 22: திண்டிவனம் நகராட்சிக்கு உட்பட்ட சந்தைமேடு பகுதியில் ஒத்தவாடை தெரு உள்ளது. இத்தெருவில் 30க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இங்கு குடியிருப்போர், சாலையை ஆக்கிரமித்து வீடுகள் கட்டுவதால், தெரு கடைசி வரையில் உள்ள வீடுகளுக்கு வாகனங்கள் செல்ல முடியாத சூழ்நிலை உருவாகி உள்ளது. இது சம்பந்தமாக வட்டாட்சியரிடம் பலமுறை மனு கொடுத்தும் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை எனக் கூறி திண்டிவனம் சார் ஆட்சியர் அலுவலகத்தில் சார் ஆட்சியர் மெர்சி ரம்யாவிடம் சந்தைமேடு பகுதியை சேர்ந்த பொதுமக்கள் மனு அளித்தனர். அப்போது ஒரு மூதாட்டி, நாங்கள் இறந்தால் எடுத்து செல்வதற்கு கூட வழியில்லாத நிலை உள்ளதாக கண்ணீருடன் கூறினார். உரிய நடவடிக்கை எடுப்பதாக சார் ஆட்சியர் தெரிவித்தார்.

Related Stories: