2 மாட்டு வண்டி பறிமுதல்

உளுந்தூர்பேட்டை, மார்ச் 22: உளுந்தூர்பேட்டை அருகே திருநாவலூர் காவல்நிலைய சப்-இன்ஸ்பெக்டர் நந்தகோபால் மற்றும் போலீசார் காவல்நிலையத்திற்கு உட்பட்ட பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது மயிலங்குப்பம் ஆற்றில் இருந்து மணல் கடத்தலில் ஈடுபட்ட இரண்டு மாட்டு வண்டிகளை பறிமுதல் செய்த போலீசார், மணல் கடத்தலில் ஈடுபட்ட சிறுபாக்கம் கிராமத்தை சேர்ந்த மாசிலாமணி என்பவரை கைது செய்தனர். தப்பி ஓடிய மற்றொருவரை தேடி வருகின்றனர்.

Related Stories: