ஊட்டி, மார்ச் 21: ஊட்டி அரசு தாவரவியல் பூங்காவில் 25 ஆயிரம் தொட்டிகளில் நாற்று நடவு பணிகள் நிறைவடைந்தது. இதனை தொடர்ந்து மழையை எதிர்பார்த்து ஊழியர்கள் காத்திருக்கின்றனர். சுற்றுலா தலங்கள் நிறைந்த ஊட்டிக்கு நாள் தோறும் பல ஆயிரம் சுற்றுலா பயணிகள் வருகின்றனர். இருந்த ேபாதிலும், கோைட சீசனான மார்ச் மாதம் முதல் மே மாதம் வரை அதிகளவிலான சுற்றுலா பயணிகள் வருவது வழக்கம். இங்கு வரும் சுற்றுலா பயணிகளை மகிழ்விக்கும் பொருட்டு பல்ேவறு நிகழ்ச்சிகள் மற்றும் கண்காட்சிகள் நடத்தப்படுகிறது. இதில், முக்கியமானது மலர் கண்காட்சி ஆகும். ஊட்டி தாவரவியல் பூங்காவில் நடக்கும் இந்த மலர் கண்காட்சியை காண லட்சக் கணக்கான சுற்றுலா பயணிகள் வருகின்றனர். இங்கு வரும் சுற்றுலா பயணிகளை மகிழ்விக்கும் பொருட்டு பூங்காவில் பல லட்சம் மலர் செடிகள் நடவு செய்யப்படும்.