சாராயம் விற்றவர் கைது

திருவெண்ணெய்நல்லூர், மார்ச் 21:  திருவெண்ணெய்நல்லூர் அருகே உள்ள சி.மெய்யூர் கிராமத்தில் சாராயம் விற்பனை செய்யப்பட்டு வருவதாக திருவெண்ணெய்நல்லூர் போலீசாருககு தகவல் கிடைத்தது  அதன்பேரில் சப்-இன்ஸ்பெக்டர் ஞானசேகரன் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று சோதனை மேற்கொண்டனர்.

அப்போது அங்கு 2 பேர் சாராயம் விற்பனை செய்தது தெரியவந்தது. விசாரணையில், சித்தலிங்கமடம் கிராமத்தை சேர்ந்த ஆறுமுகம் மகன் ஜெயகணேஷ்(37), சிகாமணி(50) ஆகிய இருவரும் அவரவர் வீட்டில் சாராயம் வைத்து விற்பனை செய்தது தெரியவந்தது. இதையடுத்து 2 பேரையும் போலீசார் கைது செய்து, அவர்களிடமிருந்து தலா 5 லிட்டர் சாராயத்தை பறிமுதல் செய்தனர்.

Related Stories: