கள்ளக்குறிச்சி நாடாளுமன்ற தொகுதி திமுக தேர்தல் அலுவலகம் திறப்பு

கள்ளக்குறிச்சி, மார்ச் 21:    கள்ளக்குறிச்சி நாடாளுமன்ற தொகுதி திமுக தேர்தல் அலுவலகம் திறப்பு விழா நடந்தது. விழுப்புரம் தெற்கு மாவட்ட திமுக செயலாளர் அங்கையற்கண்ணி தலைமை தாங்கினார். எம்எல்ஏக்கள் சங்கராபுரம் உதயசூரியன், ரிஷிவந்தியம் வசந்தம் கார்த்திகேயன், திமுக வேட்பாளர் டாக்டர் கவுதமசிகாமணி ஆகியோர் முன்னிலை வகித்தனர். சிறப்பு அழைப்பாளராக விழுப்புரம் மத்திய மாவட்ட செயலாளர் பொன்முடி எம்எல்ஏ கலந்துகொண்டு தியாகதுருகம் சாலை பகுதியில் ஏற்கனவே எல்ஐசி அலுவலகம் செயல்பட்டு வந்த கட்டிடத்தில் திமுக மக்களவை தேர்தல் அலுவலகம் செயல்படுவதற்கு குத்துவிளக்கேற்றி திறந்து வைத்தார். அப்போது மாவட்ட அவைத்தலைவர் ராமமூர்த்தி, மாவட்ட துணை செயலாளர் காமராஜ், தலைமை செயற்குழு உறுப்பினர் செல்வநாயகம், தியாகதுருகம் மவுண்ட்பார்க் மேல் நிலை பள்ளி தாளாளர் மணிமாறன், நகர செயலாளர் சுப்ராயலு, ஒன்றிய செயலாளர்கள் அரவிந்தன், வெங்கடாசலம், காங்கிரஸ் கட்சி மாவட்ட தலைவர் ஜெய்கணேஷ், விடுதலை சிறுத்தை கட்சி மாவட்ட செயலாளர் தனபால், மாவட்ட துணை செயலாளர் ராமமூர்த்தி, ஐஜேகே நிர்வாகி பழனிசாமி உள்ளிட்ட கூட்டணி கட்சி நிர்வாகிகள் பலர் கலந்துகொண்டனர்.

சின்னசேலம்: சின்னசேலத்தில், நகர திமுக சார்பில் தேர்தல் அலுவலகம் திறப்பு விழா நடந்தது. விழுப்புரம் தெற்கு மாவட்ட செயலாளர் அங்கையற்கண்ணி தலைமை தாங்கினார். சின்னசேலம் ஒன்றிய செயலாளர் உதயசூரியன் எம்எல்ஏ, நகர செயலாளர் செந்தில்குமார், மாவட்ட காங்கிரஸ் தலைவர் ஜெய்கணேஷ் முன்னிலை வகித்தனர்.

முன்னாள் அமைச்சர் பொன்முடி கலந்து கொண்டு திமுக தேர்தல் அலுவலகத்தை திறந்து வைத்தார். முன்னாள் தலைவர் அண்ணாமலை, மாவட்ட மகளிர் தொண்டரணி அமைப்பாளர் அருள்மொழி, நகர அவைத்தலைவர் பரமசிவம்,  ஒன்றிய இளைஞர் அணி அமைப்பாளர் சுரேஷ்குமார், நகர துணை செயலாளர் பிளைட் ரவி, நகர தகவல் தொழில் நுட்ப அணி செயலாளர் ஜவகர், முன்னாள் கவுன்சிலர் சுந்தர், மதிமுக நகர தலைவர் ராஜா உள்ளிட்ட கூட்டணி கட்சியினர் கலந்து கொண்டனர்.

Related Stories: