தீ விபத்தில் 5 பேர் படுகாயம்

திருக்கோவிலூர், மார்ச் 21: திருக்கோவிலூர் அருகே ஏற்பட்ட திடீர் தீ விபத்தில் 5 பேர் படுகாயம் அடைந்தனர். தீ விபத்துக்கான காரணம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.  திருக்கோவிலூர் அடுத்த அத்தண்ட மருதூர் கிராமத்தில் நேற்று அதிகாலை ஒரு வீட்டில் திடீரென தீவிபத்து ஏற்பட்டது. இதில் வேலாயுதம் (45), இவரது மகள்கள் சத்யா (15), அன்புசெல்வி (10), மற்றொரு வேலாயுதம் (38), ராணி (45) ஆகிய 5 பேர் தீக்காயம் அடைந்தனர். இவர்கள் திருக்கோவிலூர் அரசு மருத்துவ

மனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெறுகின்றனர். இவர்களில் வேலாயுதம் (38), ராணி ஆகியோர் மேல் சிகிச்சைக்காக புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். துக்க நிகழ்ச்சிக்காக வந்தபோது இந்த தீவிபத்து ஏற்பட்டதாக தெரிகிறது. இதனால் அப்பகுதியில் சிறிதுநேரம் பரபரப்பு ஏற்பட்டது.

Related Stories: