வாக்குசாவடி மையங்களில் அதிகாரி ஆய்வு

சீர்காழி, மார்ச் 20: சீர்காழி அருகே சட்டநாதபுரம், தென்னலக்குடி, அள்ளிவிளாகம் ஆகிய பகுதிகளில் உள்ள பள்ளிகளில் அமைக்கப்பட இருக்கும் வாக்குசாவடி மையங்களை நாகை மாவட்ட ஊரக வளர்ச்சி துறை திட்ட இயக்குனர் சந்தோஷ்குமார் பார்வையிட்டார். அப்போது, வாக்குசாவடி மையங்களில் பாதுகாப்பு குறித்தும் அடிப்படை வசதிகள் குறித்தும் கேட்டறிந்தார். அப்போது நாகை மாவட்ட கோட்ட ஊரக வளர்ச்சி துறை செயற்பொறியாளர் செல்வராஜ், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் கஜேந்திரன், ரெஜினாராணி, பொறியாளர்கள் முத்துகுமார், தாரா, மேற்பார்வையாளர் சந்திரசேகரன், ஓசைநாயகி, தலைமையாசிரியர் ராஜசேகர், ஊராட்சி செயலாளர் அந்தோணி

உடனிருந்தனர்.

Related Stories: